முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 19 பேர் உயிரிழப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,568 பேர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,60,190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,19,511 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,657 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், கொரோனா பாதிப்பு குணமடைந்து 25,68,161 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து தற்போது 16,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 239 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona, CoronaVirus, Covid-19, News On Instagram