தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைதிரும்பவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரையிலிருந்து 100 முதல் 500 மீட்டர் தொலைவில் படகுகளை நிறுத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மைய அறிக்கை:
20.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Weather News in Tamil