தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் மூன்று பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தர்மபுரி பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் பலியான வழக்கில் ஆயுள் கைதிகளாக இருந்த மூன்று பேர் நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக அரசின் பரிந்துரையின் பெயரில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மூன்று பேர் விடுதலைக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.
அதில், “சட்டவிதிகளுக்கு உள்பட்டே மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 13 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று தலைமை வழக்கறிஞரும், தலைமை செயலாளரும் கூறினர். அவர்கள் வெளியே வந்தால், சமுதாயத்திற்கு ஏந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்திய பிறகே அவர்களது விடுதலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.” என்று கூறப்பட்டுள்ளது.
Also See..
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.