முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2nd Marriage : முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Last Updated :

பணியில் உள்ள அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் செய்தால் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “1973 தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின்படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது.அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.

அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர்.

Must Read : கிராமங்களில் தொடரும் மின்வெட்டு.. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குவதாக குற்றச்சாட்டு

எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Marriage, TN Govt