கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, பொங்கல் நாட்களில் கோவிலுக்கு செல்ல தடை , திரையரங்கு, வணிக வளாகம் போன்ற இடங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காதது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே ஆறு அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக்கூடாது.
இதையும் படிங்க: யாரெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும். முக கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மதுவகைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சாய்னா குறித்து அவதூறு பதிவு.. சித்தார்த் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறைக்கு கடிதம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona safety, Covid-19, Tamilnadu govt, Tasmac