முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் இல்லத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ் குமார் இல்லத்திற்குள் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் நுழைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞராக தங்களது பணியை செய்யும் வழக்கறிஞரின் இல்லத்தில் முன் அனுமதி பெறாமல் சோதனை நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என அமல்ராஜ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also read... 8 மாவட்டங்களில் மட்டுமே பார்களுக்கான டெண்டர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
வழக்கறிஞர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென உத்தரவிடுமாறு டிஜிபிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also read... தேசியக்கொடி, அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!
மேலும், வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் இல்லத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தனது கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajendra balaji