திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், கோட்டூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு அடியில் செல்லும் குழாயில், இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதனால் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மேலும், அருகில் உள்ள நிலங்களிலும் எண்ணெய் பரவி வருவதால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 6 அடிக்கு கீழ் பதிக்க வேண்டிய எரிவாயு குழாய்களை 3 அடியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் புதைத்துள்ளதே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.