நண்பனின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் - ஆரணியில் நடந்த கொடூரம்
நண்பனின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் - ஆரணியில் நடந்த கொடூரம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள்
Arani | ஆரணியில் நண்பர்களை நம்பி மனைவியை வீட்டில் தனியாக விட்டு வேலைக்கு சென்றதால் நண்பர்களே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் நண்பர்களை நம்பி வீட்டில் மனைவியை தனியாக விட்டு வேலைக்கு சென்ற நேரத்தை சாதகமாக பயன்படுத்தி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கணவரின் நண்பர்களான இ ருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் வசிக்கும் லாரி டிரைவர் மணிகண்டன் - ரேவதி தம்பதியினருக்கு ஷாலினி (10) என்ற மகளும் ராகுல்(8) என்ற மகனும் உள்ளனர். மணிகண்டனின் நண்பனான கோகுல்ராஜ் பெங்களுரில் உள்ள ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆரணிக்கு அழைத்து வந்து நண்பன் மணிகண்டனின் வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் குடித்தனம் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் மணிகண்டன் 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் வேலைக்கு சென்றதால் ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மணிகண்டனின் நண்பன் கோகுல்ராஜ் மற்றொரு நண்பனான ஜெயசூர்யா ஆகியோர் மதுபோதையில் நண்பன் மணிகண்டனின் மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்கு சென்று கோகுல்ராஜ் ஜெயசூர்யா ஆகியோர் கூட்டாக ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரேவதி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது மனைவியுடன் சென்று ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாiணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து ரேவதியை கொலை மிரட்டல் விடுத்ததை விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 2பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ரேவதியை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். ஆரணியில் நண்பர்களை நம்பி மனைவியை வீட்டில் தனியாக விட்டு வேலைக்கு சென்றதால் நண்பர்களே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் மோகன்ராஜ் (ஆரணி )
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.