முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆடுகளை குளிப்பாட்ட அழைத்துச் சென்ற 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!

ஆடுகளை குளிப்பாட்ட அழைத்துச் சென்ற 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!

ஏரியில் மூழ்கி இறந்த மூன்று சிறுமிகளின் உடலை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஏரியில் மூழ்கி இறந்த மூன்று சிறுமிகளின் உடலை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஏரியில் மூழ்கி இறந்த மூன்று சிறுமிகளின் உடலை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  • Last Updated :

திருவண்ணாமலை அடுத்த கம்பப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் ஆட்டை குளிப்பாட்ட அழைத்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் மூன்று சிறுமிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த சு.கம்பப்பபட்டு கிராமத்தில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வரும் மாபுக்கான் என்பவருக்கு தில்ஷாத் என்ற மனைவியும் ஐந்து பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தில்ஷாத் இன்று அதே கிராமத்தில் கூலி வேலைக்கு சென்ற நிலையில், ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக 15 வயதான 9-ம் வகுப்பு படித்து வரும் இரட்டைக் குழந்தைகளான நஸ்ரின், மற்றும் நசீமா, 7ம் வகுப்பு பயின்று வரும் ஷாகிரா மற்றும் 3-ம் வகுப்பு பயின்று வரும் ஷப்ரின் ஆகிய 4 சிறுமிகள் அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையோரம் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் தண்ணீர் குடிக்கச் சென்ற ஆடுகளை திருப்பி ஓட்டுவதற்காக சென்ற நஸ்ரின் முதலில் ஏரியில் தவறி விழுந்துள்ளார்.

Also read: அடேங்கப்பா... புத்தாண்டு வசூலை மிஞ்சிய பொங்கல் டாஸ்மாக் விற்பனை...

அவரை காப்பாற்றுவதற்காக உடன் சென்ற நசீமா, ஷாகிரா ஆகியோரும் முயன்றுள்ளனர். 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் மூன்று பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர், மூன்று அக்காவும் ஏரி நீரில் மூழ்கியதை பார்த்த சப்ரின் ஓடிவந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஏரி நீரில் மூழ்கிய மூன்று சிறுமிகளின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 சிறுமிகளின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

கம்பம்பட்டு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also read: கன்னியாகுமரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பான வெல்லத்தில் நோயாளிகளுக்கான ஊசி- குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி

First published:

Tags: Tiruvannamalai