திருவள்ளூரில் பெட்ரோல் ஊற்றி 6 பேர் கொண்ட கும்பல் தீயிட்டுக் கொளுத்தியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன் (வயது 33). நாலூர் ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத 6 நபர்கள் கோபிநாதன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கோபிநாதன் ஒருவழியாக தீயை அணைத்துவிட்டார். இந்தத் தகவலை செல்போன் மூலம் தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து ஏரிக்கரை பகுதிக்கு விரைந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் கோபிநாதனுக்கு முதலுதவி செய்தனர். தீயிட்டு கொளுத்தியதில் அவரது உடலில் காயங்கள் இருந்தது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் கோபிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கோபிநாதனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள் கொலை கும்பலை ஏவி கோபியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: பார்த்தசாரதி
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.