திருவள்ளூர், காக்களூர் புறக்காவல் நிலையம் அருகே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அலறல் சத்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது ஆண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார் அதனருகே பெண்ணொருவர் தலையில் பலத்த காயத்துடன் அரை மயக்கத்தில் இருந்தனர்.அந்த வீட்டின் முன்பக்க இரும்பு கிரில் கேட் பூட்டப்பட்டிருந்தது.
Also Read: வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் தாய் அதிர்ச்சி..
இதையடுத்து காவல்துறையினர்உள்ளே சென்று அந்தப் பெண்ணை விசாரித்தபோது கொலை செய்யப்பட்டு நபர் திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜி என்பவருடைய மகன் வெங்கடேசன் வயது(37) இவர்வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது. மேலும் காயம்பட்டு இருந்த பெண் மதுரவாயலைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சத்யா வயது(30) என்பதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சத்யா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு வழக்கறிஞரான வெங்கடேசனை நாடி அடிக்கடி வந்துள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட பழக்கத்தினால் சத்யாவை தனியாக அழைத்து வந்து வழக்கறிஞர் வெங்கடேசன் தற்போது காக்களூரில் கொலை செய்யப்பட்ட வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு குடித்தனம் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
Also Read: நகைக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த பெண்; எதுவும் தெரியாதது போல் இறுதி சடங்கில் நாடகம்; தஞ்சையில் பயங்கரம்!
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சத்யாவை காணவில்லை என்றுதேடி வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 பெண்கள் உட்பட 6 பேர் இன்று அவர் குடியிருந்த பகுதியை விசாரித்து சத்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு கள்ளக் காதலனான வழக்கறிஞர் வெங்கடேசனையும் மற்றும் சத்யா ஆகிய இருவரையும் பார்த்த அவர்களுடைய பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது சத்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வழக்கறிஞர் வெங்கடேசன் மற்றும் சத்யா ஆகிய இருவரையும் தலை கழுத்து மற்றும் உடல் பகுதி என சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சத்யா தலையில் வெட்டுக்காயம் அடைந்த நிலையில்மயங்கி விழுந்துள்ளார். அதனால் அவர் இறந்து விட்டார் என விட்டுவிட்டு வழக்கறிஞர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர் இதையடுத்து வழக்கறிஞர் வெங்கடேசன் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் போலீசாரின் விசாரணையில் வழக்கறிஞர் வெங்கடேசன் திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் என தெரியவந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்: பார்த்தசாரதி ( திருவள்ளூர்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.