காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. சுமார் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கான விடுதியானது பூவிருந்தவல்லி பகுதியில் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை விடுதியில் உணவு உண்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, நேமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட தரமற்ற உணவு இதற்கு காரணம் என அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, நேமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட தரமற்ற உணவு இதற்கு காரணம் என அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
Also Read : ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பாத 8 பெண்களின் நிலை குறித்து ஆலை நிர்வாகத்திடம் கேட்டனர். இதற்கு நிர்வாகத்தினரிடம் இருந்து மலுப்பலான பதில் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நீதி வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெண் தொழிலாளர்கள் போலீசாரின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Also read : மேல்மருவத்தூர் பங்காரு அடிகாளாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக நேரில் சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடடிவடிக்கைள் குறித்து அறிவுறத்தப்பட்டது. பாதிப்பு ஏற்படுத்திய கேண்டீன் தற்போது மூடப்பட்டுள்ளது. தற்போதைக்கு விடுதியில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வெளியிலிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்ற மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக மொத்தம் 256 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 159 பேர் உள்நோயாளியாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 155 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகினர். மீதமுள்ள 4 பேர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளனர். உடல்நலம் தேறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.. விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வதந்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Foxconn