திருப்பூர் அருகே சூட்கேசில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்து சாலையோர கால்வாயில் வீசிச்செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதுரோடு பகுதியில் சாலையோர கால்வாயில் நீல நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. காலை நேரத்தில் நடை பயிற்சி மற்றும் பொருட்கள் வாங்க வெளியே சென்றவர்கள் இந்த பெட்டியை கண்டு அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது பெட்டியில் இருந்து ரத்தம் கசிந்ததை கண்ட பொதுமக்கள் திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் நைட்டி அணிந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் மற்றும் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் பெண்ணின் சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஊரக போலீசார் பெண்ணின் புகைப்படத்தை கொண்டு காணாமல் போனவர்கள் விவரங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு சடலத்தை மறைக்க சூட்கேசில் வைத்து செல்லும் வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என வீசிச் சென்று இருக்கலாம் என்பதால் அந்த சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு எப்படி கொலை செய்யப்பட்டார், எந்த நேரம் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும் எனவும் அதன்மூலம் கொலையாளியை விரைந்து பிடிக்க முடியும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.