திருப்பூர் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் பயிலும் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு 14 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சைனிக் பள்ளியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 750 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.அதில் 10 மற்றும் 12- ம் வகுப்பு மாணவர்கள் 95 பேர் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 15 மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு டாக்டர்கள் மாணவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.