தாராபுரம் அருகே கோஷ்டி மோதலில் ரவுடி வெட்டி கொலை. மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த 5பேர் கைது.
தாராபுரம் அடுத்த ஆத்திகளம் பகுதியில் உள்ள காலியிடத்தில் கடந்த 18ம் தேதி பலத்த வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அலங்கியம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். போலீஸாரின் விசாரணையில் இறந்தது விருதுநகரை சேர்ந்தவரும் தற்போது மதுரையில் வசித்துவரும் ரவுடி விக்கி(எ)விக்னேஷ் என்பது தெரியவந்தது.
Also Read: சேரன் பாண்டியன் பட நடிகை சித்ரா காலமானார்
விக்னேஷ் மீது விருதுநகர் காவல்நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்ததது. இதனையடுத்து தாராபுரம் டி.எஸ்.பி.தனராசு தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விக்னேஷின் அண்ணன்
முத்து காமாட்சிக்கும் உஷா என்ற பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதன்காரணமாக உஷாவின் உறவினரான சுகன்ராஜ் தனது ரவுடி கோஷ்டியுடன் 2018ம் ஆண்டு முத்துகாமாட்சியை வெட்டிகொலை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் கோஷ்டி தனது அண்ணனை கொலை செய்த சுகன்ராஜின் கூட்டாளிகளை தீர்த்து கட்டதிட்டமிட்டு தனது நண்பரான கேடிமணி என்கிற மணிகண்டன் கும்பலோடு இணைந்து சங்கர், சண்முகம் என்ற இருவரை கொலை செய்துள்ளனர்.
Also Read: பாலியல் தொல்லைக் கொடுத்த மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகள் - முதியவர் மரணத்தில் திடீர் திருப்பம்
இதில் முக்கிய எதிரியான சுகன்ராஜ் கால் இழந்த நிலையில் உயிர் தப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து எப்படியும் விக்னேஷை தீர்த்து கட்டிவிட முடிவு செய்த சுகன்ராஜ் கோஷ்டியினர் இரண்டு கும்பலுக்கும் நெருக்கமான தாராபுரம் அடுத்த பொன்னாபுரத்தில் வசிக்கும் மனோஜ்(எ)மனோகரன் உதவியை நாடியுள்ளனர். மதுரையில் இருந்த விக்னேஷை தாராபுரம் அருகே ஆத்திகளம் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கே பதுங்கி இருந்த சுகன்ராஜ் கோஷ்டினர் பயங்கர ஆயுதங்களை கொண்டு விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குற்றவாளிகள் விட்டுசென்ற தடயங்கள், செல்போன் தொடர்புகள் ஆகியவற்றை சேகரித்து கொலையாளிகளை தேடி போலீஸார் அவர்களுக்கு கிடைத்த ஆதாரங்களை கொண்டு மனோஜ்(எ)மனோகரன், செல்வம்(எ)திருவளர்செல்வன், கருப்பு(எ)கருப்புசாமி, சுகன்ராஜ், மற்றும் 18வயதுடைய நபர் ஆகிய 5பேரையும் கைது செய்தனர்.
போலீசார் விக்னேஷ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் பைக்குகள், செல்போன்கள்,மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதோடு கொலையாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் ரவுடி விக்னேஷ் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.