முகப்பு /செய்தி /tamil-nadu / சிறைகாவலர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு போக்சோ குற்றவாளி தப்பியோட்டம் - திருச்சி மத்தியச்சிறையில் பரபரப்பு

சிறைகாவலர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு போக்சோ குற்றவாளி தப்பியோட்டம் - திருச்சி மத்தியச்சிறையில் பரபரப்பு

போக்சோ குற்றவாளி தப்பியோட்டம்

போக்சோ குற்றவாளி தப்பியோட்டம்

Trichy : திருச்சி மத்தியச் சிறை விசாரணை கைதி, அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :

திருச்சி மத்தியச் சிறை விசாரணை கைதி, அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் தீபன்ராஜ் (40). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, தனது தாய் வீட்டிற்கு மனைவி சென்றுவிட்டார்.  இவர்களுடைய இரண்டு வயது பெண் குழந்தை, தந்தை தீபன் ராஜ் உடன் இருந்துள்ளது. தீபன் ராஜ், தான் பெற்ற இரண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் தாய் தனது வீட்டிற்கு வந்தபோது, தந்தையின் அத்துமீறல் குறித்து தனது மழலை குரலில் தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, தீபன்ராஜை கைது செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Also Read:  ஆன்லைன் செயலி மூலம் கடன்.. புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை

கடந்த, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சிறையில் விசாரணை கைதியாக உள்ள தீபன் ராஜூக்கு கடந்த, 9ம் தேதி வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் தீபன்ராஜ், சிறைக் கைதிகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிறைக்காவலர்கள் தொடர்ந்து காவல் பணியில் ஈடுபட்டநிலையில், இன்று அதிகாலை, 4.30 மணியளவில், அவர்களது கண்ணில் மண்ணை தூவிவிட்டு மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரசு மருத்துவமனை போலீசார், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது, தீபன்ராஜை மருத்துவமனை வாசலில் இருந்து ஒருவர் பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.அதையடுத்து தீபன்ராஜையும், அவர் தப்பிக்க உதவிய மர்ம நபரையும் போலீசார் தேடி வந்தனர்

Also Read: அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன் - எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் தப்பியோடிய கைதி, திருப்பூரில் உள்ள தனது அண்ணன் சத்யா வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படையினர் தீபன்ராஜை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வருகின்றனர். திருச்சி மத்தியச்சிறை விசாரணை கைதி தீபன்ராஜ் தப்பியோடிய விவகாரத்தில் பணியில் அசட்டையாக இருந்த கோவிந்தராஜன், பிரகாஷ், வினோத் குமார் ஆகிய மூன்று சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Pocso, POCSO case, Prison, Prisoner, Trichy