மதுகுடிக்க பணம் தராத மாமியாருக்கு மருமகன் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). டீக்கடையில் வேலை பார்த்து வரும் கார்த்திக் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பவதாரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மாமியார் தேவி (வயது 44) வீட்டில் வசித்து வந்துள்ளார். கார்த்திக்கிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது இதன்காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கணவன் சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்ப பொறுப்பை பவதாரணி ஏற்றார்.
Also Read: ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்
காரைக்காலில் உள்ள கம்ப்யூட்டர் சாம்பிராணி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலைக்கு சேர்ந்தார். வாரம் ஒருமுறை பவதாரணி திருச்சிக்கு வந்து செல்வார். பவதாரணி வேலைக்கு செல்வது கார்த்திக்குக்கு பிடிக்கவில்லை. இதன்காரணமாக மாமியார் தேவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மதுகுடிப்பதற்கு மாமியார் தேவியிடம் பணம் கேடுள்ளார்.
வேலைக்கு போகாமல் மகளை கஷ்டப்படுத்துவது இல்லாமல் மதுக்குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்கிறாய் பணம் எல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மது குடிக்க பணம் கேட்டு தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மாமியாரின் கன்னத்தில் அறைந்த கார்த்திக் தான் வைத்திருந்த சிகரெட்டால் தேவியின் கழுத்தில் சூடு வைத்துள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தேவி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, E Cigarettes, Trichy