திருச்சியில் கள்ளத்தொடர்பிலிருந்த தந்தையை மகன்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெடுங்கூர் மேலத்தெருவைச்சேர்ந்த மருதமுத்து மகன் சுப்ரமணி வயது(50).இவருக்கு 45வயதில் சாந்தி என்ற மனைவியும்,25 வயதில் அரவிந்தகுமார் மற்றும் 22 வயதில் வினோத் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் அரவிந்தகுமார் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 2ஆம் தேதி சொந்த ஊரான நெடுங்கூருக்கு வந்துள்ளார். வினோத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில் சுப்பிரமணிக்கு அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கடந்த 7வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.இதனால் மனைவி சாந்தியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் தீபாவளியன்று தன் தந்தையை வீட்டுக்கு வரும்படி மகன்கள் அரவிந்த் மற்றும் வினோத் இருவர் கூப்பிட்டு உள்ளனர். அப்போது சுப்பிரமணிக்கும், மகன்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மகன்கள் அரவிந்தகுமார் மற்றும் வினோத் தந்தை சுப்பிரமணியத்தை அரிவாள் மற்றும் இரும்பு பைப்பால் தாக்கியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த்குமார்மற்றும்வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : கலைவாணன் (திருச்சி)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.