பட்ஜெட் பெயரில் 'அல்வா' - தமிழக பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்
பட்ஜெட் பெயரில் 'அல்வா' - தமிழக பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Tamil Nadu budget | தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றப்போவதில்லை. எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையை தான் தி.மு.க அரசு செய்கிறது என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
பட்ஜெட் பெயரில் 'அல்வா' என்று தமிழக பட்ஜெட்டை கிண்டலடித்து பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி, மூன்றாவது முறையாக கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டில்லியில் தமிழக ஆளுநரை நீக்க வேண்டும் என்று திமுகவினர் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அவரை நேரில் சந்தித்து பேசுகிறார்கள்.
ஆளுநருக்கென்று சில அதிகாரங்களை அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ளது. அரசியலமைப்புக்கு உட்பட்டு தன் கடமையை ஆளுநர் நிறைவேற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றப்போவதில்லை. எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையை தான் தி.மு.க அரசு செய்கிறது என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார் தமிழக அரசு பட்ஜெட்டில் அல்வா கொடுக்கும் வேலையை தான் செய்கிறார்கள் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.