பொங்கல் பரிசு தொகுப்புடன் பனங்கிழங்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை!
பொங்கல் பரிசு தொகுப்புடன் பனங்கிழங்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை!
பனங்கிழங்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள அயன்வடமலாபுரம், முத்தலாபுரம், கீழ்நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பனங்கிழங்கு சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் பனங்கிழங்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள அயன்வடமலாபுரம், முத்தலாபுரம், கீழ்நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பனங்கிழங்கு சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது.
வைப்பாற்று கரையோரம் உள்ள மணற்பாங்கான இடத்தில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு நல்ல ருசியாக இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையும் நெருங்கி வருவதால் விவசாயிகள் அறுவடை பணியை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளியூர் வியாபாரிகள் பனங்கிழங்கு கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். உள்ளுர் வியாபாரிகள் மட்டும் தற்போது கொள்முதல் செய்து வருவதால் பனைத் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.