தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மாதம் தோறும் குடும்ப தலைவிக்கு ரூ 1,000 தரப்படும் என
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ 10 ஆயிரம் ரூபாய் கடன்பட்டுள்ள கடன்கார ஆட்சியாக திமுக ஆட்சி மாறிவிட்டது.
அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி வந்தது, இன்றைக்கு திமுக வழங்கிய பொங்கல் பரிசில் அரிசி புழுத்து போச்சு, வெல்லம் உருகி பேச்சு, மிளகில் பப்பாளி கலப்படம் இருந்ததாகவும், ஒரு மஞ்சை பை கூட வழங்க முடியாத அரசு உள்ளது என்றும், தேர்தலுக்கும் முன்பு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறிய முதல்வர் இன்றைக்கு பொங்கல் பரிசாக 5 பைசா கூட கொடுக்கவில்லை என்றும் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும்.
ஆனால் திமுகவில் முடியாது. அது குடும்ப கட்சி என்றும், குடும்ப ஆட்சி என்பது தான் திமுகவின் கொள்கை, கலாச்சாரம் என்றும், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் திமுக ஆட்சியின் லட்சணத்தினை பார்த்து மக்களே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். கரூரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினிடம் ஓட்டு கேட்பது இருக்கட்டும், 1,000 ரூபாய் எப்ப கொடூப்பீங்கள் என்று மக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த விரும்பவில்லை, நீதிமன்ற உத்தரவு காரணமாக நடத்துகின்றனர். மக்களை நேரிடையாக சந்தித்து மக்கள் மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்கிற கட்சி அதிமுக என்றும், மக்களுக்கு பயந்து கொண்டு இன்றைக்கு காணொலி காட்சி மூலமாக பிரச்சாரம் செய்யும் நிலைக்கு முதல்வரும், திமுக ஆட்சியும் தள்ளப்பட்டுள்ளது.
“கொடை வள்ளல் ஸ்டாலின் ரூ.5,000 கொடுக்க வேண்டும்” - ஓபிஎஸ் பேச்சு
திமுகவுடன் பல கட்சிகள் கூட்டணி. சிங்கம் சிங்களாக தான் வரும் என்பது போன்று அதிமுக தனியாக நிற்கிறது. அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் துணிச்சலாக மக்களை நம்பி நிற்கிறோம். ஆனால் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் கொதித்து போய் உள்ளதாக கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.