தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்கள் நிறுத்தம்.. 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்கள் நிறுத்தம்.. 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலைம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 5 யூனிட்டுகளில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 5 யூனிட்டுகளில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர்களும் அனல் மின்நிலையத்தை முழு கொள்ளளவில் இயக்காமல் கடந்த இருபது தினங்களாக காலை 10 மணிக்கு இயக்கி இரவில் நிறுத்தம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியும், முழுமையாக அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஆகிய நான்கு யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் கிருஷ்ண குமாரிடம் கேட்டதற்கு, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 ,3 ,4 ,5 ஆகிய நான்கு யூனிட்களில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 1வது யூனிட்டில் மட்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 1வது யூனிட் இயக்கப்பட்டதால் நேற்று மட்டும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-செய்தியாளர்: முரளி கணேஷ்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.