தமிழகத்தில் 1 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க | தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறது... வானிலை மையம் தகவல்!
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.