முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்று கனமழை வெளுக்கும்.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அலெர்ட்!

இன்று கனமழை வெளுக்கும்.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அலெர்ட்!

மழை

மழை

Weather update | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்பகுதியில் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடல்பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும்,  மன்னர் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heavy rain, Tamil Nadu Rain, Weather News in Tamil