வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, இரண்டாயிரம் மாட்டு வண்டிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.
குடியாத்தம் அருகே பட்டு கிராமத்தில் பாயும் பாலாற்றில், அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் கிராம மக்கள், அப்பகுதியில் மணல் அள்ள வந்த இரண்டாயிரம் மாட்டு வண்டிகளை சிறைப்பிடித்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களிலும் மணல் அள்ளப்படுவதால் இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர், கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பிரச்னை தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே குவாரி செயல்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.