பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க இயலாது என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையும் படிக்க : காதலனை விஷ ஜூஸ் கொடுத்து கொன்றுவிட்டு தப்பிக்க கூகுளில் ஐடியா தேடிய இளம்பெண்.. தமிழக போலீஸ் வசம் விசாரணை
தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் என 20 வகையான பொருட்களை தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், டிசம்பர் 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal, Pongal Gift