முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜுன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் - வானிலை மையம் தகவல்

ஜுன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் - வானிலை மையம் தகவல்

மழை

மழை

  • Last Updated :

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன், கேரளாவில் ஜுன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக கூறினார்.

இதனால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என்றார்.

வரும் 31-ம் தேதியில் இருந்து ஐந்தாம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Also read... பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

top videos

    First published:

    Tags: Weather Update