கொரோனா தடுப்பு மருந்து வீணாவதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் மட்டும் தடுப்பு மருந்து முகாம் நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவிறுத்தல் வழங்கியது.
பெரிய மாநிலங்களில் வாரத்தில் 4நாட்களுக்கு மேல் தடுப்பூசி போடவும் சிறிய மாநிலங்களில் 4நாட்கள் மட்டும் தடுப்பூசி மையம் செயல்படுத்தவும் யூனியன் பிரதேசங்களில் 2நாட்கள் தடுப்பூசி போடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் 1 வயலில் 10 பேருக்கும், கோவாக்சின் ஒரு வயலில் 20 பேருக்கும் தடுப்பூசி போட வேண்டும். சில நேரங்களில் 10க்கும் குறைவான நபர்கள் மட்டுமே இருக்கும்பட்சத்தில் வயலில் இருக்கும் மீதி மருந்து பயனற்றதாகிவிடுகிறது.
ஒரு வயலை திறந்த பிறகு அதனை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும். இதனால் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் போட திட்டமிடப்பட்டுள்ளது. வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.