தமிழகத்தில் நாளை முதல் நவ. 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே காலகட்டத்தில் தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் 20-ம் தேதிகளில் தமிழகத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை இந்த முறை சுமார் பத்து நாட்கள் தாமதமாக கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது என்றார். நாளை தொடங்கி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும் இது குமரிக்கடலை ஒட்டிய பகுதிகளைக் கடக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனால் நாளை முதல் 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் என்றும், அக்காலகட்டத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அவர் கூறினார்.
பருவமழை வலுப்பெறும் போது தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் சீற்றம் மிகுந்து காணப்படும் என்றும், அந்த சமயத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஏற்கெனவே ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக சென்றவர்கள் உடனடியாக கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.