சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் 94 வயதான பாட்டி கெளரி. கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்மதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான அளவு சர்க்கரை நோய், மூச்சுத்திணறல் இருந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சையும், நல்ல உணவும், கபசுரக்குடிநீர் போன்றவையும் கொடுத்ததால் தற்போது குணமாகி வீடு திரும்புவதாக கூறுகிறார் மருத்துவர் கண்ணன்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியாது. ஆனால் தற்போது குணமாகி நல்ல நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார் பாட்டி கெளரி.
பாட்டி மட்டுமல்லாது 70 வயதான அவரது மகள் ஜெயலட்சுமியும் கொரோனா பாதிப்பு காரணமாக அவருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் இருப்போர் ஆரம்ப நிலையிலேயே வந்தால் குணமடைந்து விரைவில் வீடு திரும்பலாம் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.