வாழ்வதற்கு வீடும் இல்லை, இடுகாடு செல்வதற்கு பாதையும் இல்லை, எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அகதிகள் போல் வாழ்வதாக கிராமத்து மக்கள் வேதனை.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பாலத்தளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மனவயல் கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்றாடம் விவசாய கூலி வேலை பார்த்து வந்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்வாதரத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு குடியிருக்க இடம், வீடு இல்லாததால் அரசு மூலம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த வீடுகள் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால், வீடுகள் அனைத்தும் மேல் கூரை மற்றும் பக்கச் சுவர்கள் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடம் சேதம் ஆகியுள்ளதால், மழை காலங்களில் மழைநீர் கசிவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக தூங்க கூட முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு சில நேரங்களில் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் ஒரு சிலருக்கு காயம் கூட ஏற்பட்டிருக்கிறது. மேலும் இப்பகுதியில் இடுகாடு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் முறையான குடிநீர், சாலை வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அகதிகள் போல் வாழ்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.