தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ராஜாக் (வயது 63). இவர் வெளிநாட்டில் இருந்து விட்டு அதன் பிறகு ஊருக்கு வந்து ராஜகிரியில் கைலி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகனைத் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இவரது மகள் ஹதிஜா பிவி கும்பகோணம் மாநகராட்சியில் திமுகவின் 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அப்துல் ரஜாக் வழக்கம்போல் ராஜகிரியில் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் வெகு நேரம் ஆகியும் ராஜகிரியில் கடை திறக்காததால் அங்குள்ளவர்கள் அப்துல் ரசாக்கின் மகனுக்கு தகவல் தெரியப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அவரது மகன் முகமது ஆரிப் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது கதவை உடைக்கப்பட்டுள்ளதையும், தந்தை காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு அய்யம்பேட்டை ஆய்வாளர் வனிதா மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read : மாமூல் தர மறுத்த வளையல் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிமுக பெண் நிர்வாகி கைது
தகவலறிந்த பாவநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் ஹேமா, தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் மோப்ப நாய் டப்பி கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்றது. இதுகுறித்து ரெகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.