முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தனித் தமிழ் ஆராய்ச்சியகம் வேண்டும்: தமிமுன் அன்சாரி கோரிக்கை

தனித் தமிழ் ஆராய்ச்சியகம் வேண்டும்: தமிமுன் அன்சாரி கோரிக்கை

அமைச்சர் மா.பாண்டியராஜனை சந்திக்கும் தமிமுன் அன்சாரி

அமைச்சர் மா.பாண்டியராஜனை சந்திக்கும் தமிமுன் அன்சாரி

  • Last Updated :

தனித் தமிழ் ஆராய்ச்சியகம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அமைச்சர் மா.பாண்டியராஜனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ சந்தித்தார்.

சந்திப்பின் போது, நாகப்பட்டினத்தில் பிறந்த மறைமலையடிகளார் பெயரில் நாகையில் தனித் தமிழ் ஆராய்ச்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமாக இதை நடத்துவது குறித்து முதல்வரிடம் பேச வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

அதுபோல் தமிழுக்கு 16 ஆயிரம் அறிவியல் தமிழ் சொற்களை வழங்கிய மணவை.முஸ்தபா பெயரில் ``அறிவியல் தமிழர்" விருது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். கவிஞர் நா.காமராசன் அவர்களின் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதால், அவரது கவிதை நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பிரபல பாடகர் நாகூர் அனிபா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், மக்கள் கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பெயரால் தமிழக அரசு விருதுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இவையனைத்தையும் தான் சட்டமன்றத்தில் பேசியதையும் அமைச்சரிடம் தமிமுன் அன்சாரி அவர்கள் நினைவூட்டினார். இது குறித்து முதல்வரிடம் பேசி துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

First published:

Tags: K.Pandiarajan, Minister, Tamil research, Thamimun ansari