தென்காசியில் சாதிய தீண்டாமை கொடுமையால் பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த கடைக்காரரை எதிர்த்து கேள்வி எழுப்பிய குழந்தைகளை பாராட்டும் விதமாக மதுரையில் பல்வேறு சாதியினரின் கடைகளில் இருந்து தின்பண்டங்கள் வாங்கி அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு தீண்டாமை கொடுமைகளை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தாமாக முன்வந்து கோரிக்கை வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவ்வூரில் உள்ள பெட்டிக் கடையில் தீண்டாமை நோக்கில் தின்பண்டங்கள் வழங்க மறுத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு, 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில் அம்மாணவர்களுக்கு தமிழக முழுதும் இருந்து ஆதரவு குரல் நீடித்து வருகிறது.
ALSO READ | அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்க்க கே.சி.பழனிசாமி தகுதியில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்தியாளர் : வெற்றி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Evening Snacks, Madurai, Snacks