தென்காசி மாவட்டம் புளியரையில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக கேரளா எல்லைப்பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆலயத்தில் குருபகவான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார். சதய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று மதியம் 2.48 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.
Also read:
மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி
இதனை முன்னிட்டு காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் விஷ்ணு சுத்த ஹோமம், லட்சுமி ஹோமம், மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தபின்னர் குருபாகவன் குருபெயர்ச்சியின் போது சிறப்பு தீபாரதனையுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
மேலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரைக்கும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணிக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தின் பலபகுதியில் மழை பெய்ததால் மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
ச.செந்தில் - செய்தியாளர், தென்காசி உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.