மோசடி வழக்கில் ஜாமீனில் வந்த மதுரையைச் சேர்ந்தவர் கடத்தி கொலை தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மயக்கமடைந்த நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு கும்பல் அவரை கடத்தி தாக்கியதில் மயக்கமடைந்ததாகவும், அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் உடன் இருந்தவர் கூறியதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த தென்காசி போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
Also Read: தருமபுரியில் காவலர்களை தள்ளிவிட்டு கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் - தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்
விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த அனீஸ் முகம்மது என்பது தெரியவந்தது. இவர் மதுரை வடக்கு மாசி வீதியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி வந்துள்ளார். இதில், சுமார் 12 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்காததால் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, அனீஸ் முகம்மதுவை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் ஜாமீனில் வந்து, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தொடர்ந்து அனீஸ் முகம்மதுவிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 18-ம் தேதி காவல் அலுவலகத்தில் கையெழுத்திட்டு விட்டு திரும்பிச் சென்ற அனீஸ் முகம்மதுவை ஒரு கும்பல் காரில் கடத்தியுள்ளது. அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடத்திச் சென்று, தாக்குதல் நடத்தியதாகவும் அங்கு இருந்து தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு வரும்போது இதில் சுயநினைவிழந்ததால், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
Also Read: மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு.. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் சலுகை - விசாரணையில் அம்பலம்
இதில் அனீஸ் முகம்மது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அனீஸ் முகம்மது மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. கடத்தி கொலை செய்த கும்பலை கைது செய்ய மதுரை போலீஸாருடன் இணைந்து தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: ச.செந்தில் ( தென்காசி) உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.