தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இரண்டாவது முறையாக வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் கோயில்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக பராமரித்து வருவதாகக் கூறிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இன்று மாலை நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் குடும்பத்தினர் தனி விமானத்தில் நேற்று பிற்பகல் திருச்சி வந்தனர். விமான நிலையத்தில், சந்திரசேகர ராவை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சந்திரசேகர ராவ் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று ரெங்கநாதரை தரிசனம் செய்தார். அங்கே, அர்ச்சுன மண்டபத்தில் உள்ள உற்சவர் மற்றும் தாயார் சன்னதிக்கு சென்றும் சாமி தரிசனம் செய்தார்.
Must Read : ஒமைக்ரான் : 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த தாயராகும் நாடுகள்!
பின்னர், சந்திரசேகர ராவ் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.