ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தி உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி, ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், அவசர சட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலாவதியானது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மசோதா குறித்து ஆளுநரிடம் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்னும் 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளித்தால், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online rummy, RN Ravi, Tamil Nadu Governor, Tamilnadu