பிரதமரின் சென்னை வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் சென்னை வந்த போது, பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரியும் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநரிடம் மனு அளித்தார்.
இதுதொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக, அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி மத்திய விசாரணை அமைப்பு விசாரிக்க அவர் வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Secretary, PM Modi, RN Ravi, Tamilnadu government