தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மூவாயிரத்துக்கு கீழாகவே பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,39,428 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் 2, 652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதன் மூலம் தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் படிக்க: இந்தியாவை எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - இந்திய மருத்துவர்கள் சங்கம்...
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 3,104 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 24,56,165 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,454 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. சென்னை (6) தவிர்த்து பிற மாவட்டங்களில் 5க்கும் குறைவாகவே உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்...
தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 290 பேருக்கும், ஈரோட்டில் 193 பேருக்கும், தஞ்சையில் 191 பேருக்கும் சேலத்தில் 170 பேருக்கும் சென்னையில் 165 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona death, Tamilnadu