முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவொற்றியூர் குடியிருப்பு விபத்து : நிவாரண நிதி, மாற்று குடியிருப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவொற்றியூர் குடியிருப்பு விபத்து : நிவாரண நிதி, மாற்று குடியிருப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமான நிலையில், நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்ற வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத் தெருவில் அரிவாக்குளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் பெரியளவில் உருவானதால் இன்று காலையில் இருந்தே அங்கு வசித்து வந்த  மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய உள்ளனர். இதன்காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்ற வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

Read More : 120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

Must Read : தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா?

பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil News, Tamilnadu, Thiruvotriyur