தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 87.35% பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசியை 61.46% பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். 15முதல் 18வயதுடைய சிறுவர்கள் இதுவரை 54.34 லட்சம் பேர் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் குடும்ப தொடர்பு பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே முதியோர்கள் கட்டாயம் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஞாயிறு முழு ஊரடங்கு: காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 18 வது மெகா தடுப்பூசி முகாமில் 60லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 10.73 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
சென்னையில் 1600 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 50ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அடையாறு இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமினை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிங்க: ஊரடங்கு பொழுதுகளில் மக்களிடம் இப்படிதான் நடந்துகொள்ளவேண்டும்- காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு உத்தரவு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.