பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை நிலவரம் மற்றும் மழை எச்சரிக்கை குறித்து தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். மத்தியத்தில் இருந்து இரவு வரை உள்மாவட்டங்களிலும், இரவு நேரம் தொடங்கி அதிகாலை வரை கடலோரா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல், இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தூத்துக்குடி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, இந்த திடீர் மழைக்கு மக்கள் தயாராக இருக்கும் படி வெதர்மேன் கூறியுள்ளார். இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy Rains, Rain Update, Tamil Nadu Rain, Weather News in Tamil