முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை அறிவிப்பா? போக்குவரத்துறை விளக்கம்

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை அறிவிப்பா? போக்குவரத்துறை விளக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவலை தமிழ்நாடு போக்குவரத்துறை மறுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என செய்தி சமூக வலைத்தளங்களில் அன்மையில் பரவி வருகிறது. தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஒட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று பரவிய இந்த தகவல் உண்மையல்ல என போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, "தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப் படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Fake News, Govt Bus, Tamil Nadu, Transport workers