தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 1,36,559 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் மொத்த பாதிப்பு 29,39,923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து மொத்தம் 1,42,476 பேர் கொரோனா பாதித்து தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 12,484 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,989 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 8,987 பேருக்கும், செங்கல்பட்டில் 2,701 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,866 பேருக்கும், கன்னியாகுமரியில் 678 பேருக்கும், திருவள்ளூரில் 1,273 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.