தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,46,735 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,71,411 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,548 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதன்மூலம் இதுவரையில், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26,18,980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 35,682 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 16,749 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 179 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், கோயம்புத்தூரில் 151 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.