தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் 6 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. சுட்டெரித்த வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகிறது.
தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த நிலையில், மீண்டும் வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸும் (101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டும்), மதுரையில் 38.5 டிகிரி செல்சியஸும் (101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டும்), தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸும் (100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும்), திருச்சியில் 39.3 டிகிரி செல்சியஸும் (102.7 டிகிரி ஃபாரன்ஹீட்டும்), திருத்தணியின் 39 டிகிரி செல்சியஸும்( 102.2 ஃபாரன்ஹீட்டும்) வேலூரில் 38.7 டிகிரி செல்சியஸும்(101.6 டிகிரி ஃபாரன்ஹீட்டும்) பதிவாகியுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.