தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, இன்று பொது விவாதம் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ம் தேதி தொடங்கியது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, 19-ம் தேதி வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று அவை கூடியதும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளும், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது. மார்ச் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீது எம்எல்ஏக்களின் விவாதம் நடைபெறுகிறது. மார்ச் 24 ஆம் தேதி நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிக்கவுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.