குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது இதற்குதான்... பாமக எம்.எல்.ஏ கொடுத்த விளக்கம்!
இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலைக் கடைகளில் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், சில இடங்களில் வெல்லம் உருகிவிட்டதாகவும், கரும்பு காய்ந்து விட்டதாகவும் புகார் எழுந்தது.
எனவே, இந்த ஆண்டு நியாயவிலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை மட்டும் வழங்கலாமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal festival, Pongal Gift, TN Govt