ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாதிரி படம்
Ramadan 2022: இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிக்கும் நாட்களுக்கு மட்டும், பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு இலவசமாக பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க, ஆண்டுதோறும் பச்சரிசி வழங்கப்பட்டு வந்தது. இதேபோன்று, இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிக்கும் நாட்களுக்கு மட்டும், பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தேவைப்படும் அரிசிக்கான உரிய அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நோன்பு கஞ்சிக்காக 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படவுள்ளது.
இதனால், தமிழக அரசுக்கு 13,53,60,000 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.